சண்டைநிறுத்தத்தை சந்திரிகா ஏற்க வேண்டும்: வைகோ
சென்னை:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை அதிபர் சந்திரிகா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தைக் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் சண்டைநிறுத்தம் அறிவித்த 24 மணிநேரங்களில் 150 தமிழர்களைஇலங்கை ராணுவ வீரர்கள் கொலை செய்தனர். இதைத் தட்டிக் கேட்க ஆளில்லை.
இலங்கையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே இறங்கியுள்ளது. நார்வேயின் சமரசத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும். மேலும்விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் சந்திரிகாவிடம், வாஜ்பாய் எடுத்துக் கூற வேண்டும்.
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இலங்கைஇனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளும் உதவி செய்ய வேண்டும். கடந்த 40 வருடங்களாக தமிழர்களுக்கு அதிக அதிகாரம்கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்துள்ளது இலங்கை அரசு.
பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவால் இனிமேல் தேர்தலில் நிற்க முடியாது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே இதுகுறித்து தெளிவுபடுத்தி விட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுசாத்தியமில்லாத ஒன்றாகும்.
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிஆட்சி அமைக்குமா என்பது பற்றி நான் எதுவும் கருத்து கூற முடியாது. தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க.வை மட்டுமின்றி ம.தி.மு.க.வைப் பற்றியும் ஏராளமான புகார்களைக் கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்வைகோ.
யு.என்.ஐ.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications