சண்டைநிறுத்தத்தை சந்திரிகா ஏற்க வேண்டும்: வைகோ
சென்னை:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை அதிபர் சந்திரிகா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தைக் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் சண்டைநிறுத்தம் அறிவித்த 24 மணிநேரங்களில் 150 தமிழர்களைஇலங்கை ராணுவ வீரர்கள் கொலை செய்தனர். இதைத் தட்டிக் கேட்க ஆளில்லை.
இலங்கையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே இறங்கியுள்ளது. நார்வேயின் சமரசத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும். மேலும்விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் சந்திரிகாவிடம், வாஜ்பாய் எடுத்துக் கூற வேண்டும்.
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இலங்கைஇனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளும் உதவி செய்ய வேண்டும். கடந்த 40 வருடங்களாக தமிழர்களுக்கு அதிக அதிகாரம்கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்துள்ளது இலங்கை அரசு.
பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவால் இனிமேல் தேர்தலில் நிற்க முடியாது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே இதுகுறித்து தெளிவுபடுத்தி விட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுசாத்தியமில்லாத ஒன்றாகும்.
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிஆட்சி அமைக்குமா என்பது பற்றி நான் எதுவும் கருத்து கூற முடியாது. தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க.வை மட்டுமின்றி ம.தி.மு.க.வைப் பற்றியும் ஏராளமான புகார்களைக் கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்வைகோ.
யு.என்.ஐ.