மீண்டும் இஸ்ரேல், பாலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தை
காசாசிட்டி
இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இடையே நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்க அதிபர் கிளிண்டன்தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொள்வதாக பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்குஅமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கடும் முயற்சி எடுத்து வருகிறார். அவரது பதவிக் காலம் இந்த மாதம் 20-ம்தேதியுடன் முடிகிறது. அதற்குள் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என முயற்சி எடுத்துவருகிறார்.
கிளிண்டன் தெரிவித்த யோசனையை பாலஸ்தீன தலைவர் அராபத் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து இரண்டுநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கிளிண்டனுடன் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தைநடத்தினார். இரண்டு நாட்கள் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் கிளிண்டன் கூறிய யோசனையை அராபத் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தனது நாட்டு பிரதிநிதிகளை அனுப்பசம்மதித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் இகுட் பாரக்கின் தனிச் செயலர் ஜீலத் ஷெர் இந்த குழுவிற்கு தலைமைவகிப்பார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.