For Daily Alerts
Just In
காஞ்சிமடத்திற்கு வந்தார் தேவே கவுடா
காஞ்சிபுரம்:
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி மடத்துக்கு வந்தார்.
காஞ்சி மடத்தில் அவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். சென்னையிலிருந்து கார் மூலம்காஞ்சிபுரம் வந்த தேவே கவுடா, காஞ்சி மடத்தில் ஒரு மணி நேரம் இருந்தார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு, கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் கட்சித் தொண்டர்கள்ஆகியோர் தேவே கவுடாவை வரவேற்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, January 5, 2001, 5:30 [IST]