For Daily Alerts
Just In
பாக். செல்கிறது ஹூரியத் அமைப்பின் நால்வர் குழு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய ஹூரியத் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொண்டு குழு பாகிஸ்தான் சென்று அங்குள்ளதீவிரவாத அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஹூரியத் தலைவர் அப்துல் கானி பட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இந்த நால்வர் குழுவில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாசின் மாலிக், மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் அப்துல் கானி லோன், ஜமித் ஈஇஸ்லாமி தலைவர் சையத் அலி ஷா கிலானி, ஹூரியத் அமைப்பின் முன்னாள் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் ஜனவரி 15 ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்கள். பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புக்களுடன் காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Friday, January 5, 2001, 5:30 [IST]