தமிழக தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுகிறது பா.ஜ.க
டெல்லி:
நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் தி.மு.க. வுடன் இணைந்துசெயல்படுவோம் என தமிழக பா.ஜ. பொதுச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தி.மு.க.வே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் எனவிரும்புகிறோம். தேர்தலில் தி.மு.க. வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.
தமிழகத்தில் 60 தொகுதிகளில் போட்டியிட எண்ணியுள்ளோம். அந்த தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள்போட்டியிடுவார்கள். ராமர் கோயில் விவகாரம் குறித்து எங்கள் அறிக்கையில் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால் நாங்கள் அந்த பிரச்சனையில் இழுக்கப்படுகிறோம். இதன் காரணமாக எங்களுக்கு அதிக ஓட்டுகள்கிடைக்கும் என நம்புகிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூட்டணியில் அங்கம்வகிக்கும். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் அவர்கள்தான் அதிகம் பயன் அடைந்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வுடன் எதிர்க்கட்சிகள் அமைக்கவிருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. பாரதீய ஜனதாவின்தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் வெளியிடப்படும்.
மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் தொகுதியான திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அவரது குடும்பத்தைசேர்ந்தவர்களோ அல்லது வெளயிலிருந்து யாராவதோ போட்டியிடுவார்கள். திவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தமிழ் முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை தடை செய்ய வேண்டும்.