265 நோயாளிகளை கொன்ற டாக்டருக்கு ஆயுள் தண்டனை
ல ண்டன்:
இங்கிலாந்தில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 15 பேரை கொன்றதற்காக ஆயுள் தண்டனைபெற்றுள்ள டாக்டர் தான் பணிபுரிந்த காலத்தில் மேலும் 250 பேரை கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மான்செஸ்டர் நகரில் ஹரால்ட் ஷிப்மேன் (55) என்ற மருத்துவர் தன்னிடம் வந்த நோயாளிகளை, ஹெராயின்என்ற போதைப் பொருளின் மருத்துவ வடிவான டயாமோர்பைன் என்ற அதிக அளவில் செலுத்தி கொன்றிருப்பதுதெரிய வந்திருக்கிறது.
இது குறித்த புகார் வந்தவுடன் அவர் அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தியது. முதல் கட்ட விசாரணையில்ஷிப்மேன் அதிக அளவில் போதை மருந்தை செலுத்தி 15 பெண் நோயாளிகளை கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்திற்காக சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி அவருககு ஆயுள் சிறை தண்டனைகொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷிப்மேன் டாக்டராக பணிபுரிந்த 1974-ம் ஆண்டு முதல்1998-ம் ஆண்டுவரை பேரை கொன்றிருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. ஷிப் மேன் 15 பேரைகொன்றதற்காகத்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை விசாரணைகுழுவினர் போலீசாருக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications