தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது தி.மு.க: ஜெ
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தி.மு.க.அரசு, தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு விடுதலை படை, தமிழர் தேசிய இயக்கம்,தமிழ்நாடு விடுதலை முன்னணி ஆகிய தீவிரவாத இயக்கங்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த தீவிரவாத இயக்கங்களின் துணையுடன் தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாறு இன்டர்நெட் மூலம் பொதுமக்களின் ஓட்டுக்களை பெற முயற்சிக்கிறது.
முதல்வர் கருணாநிதி தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதலிருந்து வெளிவர வேண்டும். மக்கள் விரோத செயல்களிலும் தி.மு.க.ஈடுபட்டு வருகிறது.தி.மு.க.ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் தலைவிரித்தாடுகிறது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஒரு நாடகம். ராஜ்குமாரைக் கடத்த வேண்டும் என்று வீரப்பனுக்கு ஆலோசனை வழங்கியவரே கருணாநிதிதான் என்றுகுற்றம் சாட்டியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications