திருச்சியில் தி.மு.க.வுக்கு எதிராகப் போர்க்கொடி
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேருவுக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருப்பவர் நேரு. இவருக்குஎதிராக முத்தரையர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அமைச்சர் நேருவுக்கு கடும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி -1, திரு ச்சி -2, லால்குடி, ஸ்ரீரங்கம், திருவரம்பூர், மருங்காபுரி, தொட்டியம், முசிறி,உப்பிலியாபுரம் ஆகிய 9 தொகுதிகள் உள்ளது. இதில் உப்பிலியாபுரம் மட்டும் தனி தொகுதி.
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதியும் தற்போது தி.மு.க. வசம் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில்தி.மு.க.வை வளர்க்க மிகவும் பாடுபட்டவர் கே.என். நேரு.
தற்போது திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்தினர் நேருவுக்கு எதிராக இருப்பதற்கு காரணம் சிலவாரங்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் முத்தரயைர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் மருதமுத்துஅமைச்சரை தரக்குறைவாக பேசினார்.
இதனால் கோபமடைந்த நேரு மருதமுத்துவை தாக்கியதோடு அவர் ஜாதியையும் தரக்குறைவாக பேசியதாகதகவல் பரவியது. இதனால் கோபமுற்ற முத்தரையர் சமூகத்தினர் ஜாதி பெயரை இழிவு படுத்தியதால் அமைச்சர்உடனே பதவி விலக வேண்டும் என பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்
முத்தரையர் சமூகத்தினர் சில நாட்களுக்கு முன் மணச்சநல்லூரில் நடக்கவிருந்த விழாவில் அமைச்சர் பங்கேற்றால்கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அமைச்சர் விழாவில் பங்கேற்கவில்லை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் முத்தரையர் அதிக அளவில் வசிக்கக்கூடிய லால்குடி,ஸ்ரீரங்கம்,தொட்டியம்,மரூங்காபுரி, முசிறி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தங்கள் தயவின்றி எந்த கட்சியும் வெற்றிபெற முடியாது என முத்தரையர்கள் கூறி வருகின்றனர்.
முத்தரையர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நேரு தங்கள்சமூகத்தினரை இழிவாக பேசியதை முதல்வர் கண்டிக்காததும் முத்தரையர் இனத்தவர்களிடையே வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது.
இப்போது இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள்வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சருக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினர் ஏற்படுத்தியுள்ள பிரச்னை அமைச்சருக்கு மட்டுமல்லது தி.மு.க.விற்கும் சட்டசபை தேர்தலில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என எதிர் கட்சியினர் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications