For Daily Alerts
Just In
வங்கதேசத்தில் கடுங்குளிர்: 11 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் ஏற்பட்ட கடுங்குளிரில் சிக்கி 11 பேர் இறந்தனர் என்று அங்கு வெளியாகிய பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராங்க்பூர் மாவட்டத்தில் 8 பேர் கடுங்குளிரில் இறந்தனர். மேலும் கடுங்குளிரினால் பஸ்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. கொட்டும் மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. க்யூரிகிராம் டவுனில் 5 டிகிரிகுறைவான வெப்பநிலையே நிலவுகிறது. இதனால் அங்கு குளிர் தாங்காமல் 3 பேர் இறந்தனர். மேலும் இறந்தவர்கள் அனைவரும் முதியவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, January 6, 2001, 5:30 [IST]