அ.தி.மு.க.வுக்கே ஆதரவு: கவுடா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை தேர்தலில் எங்களுக்கு சீட் கொடுக்கவிட்டாலும் அ.தி.மு.க.வை ஆதரிப்போம் என தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவருமான தேவேகவுடா சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர்பேட்டியின் போது கூறியதாவது:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மதவாத கட்சிகளை எதிர்ப்பதே எஙகள் லட்சியம். தமிழகத்தை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சியும் எங்கள்கட்சியைப் போல் சிறிய கட்சிதான். அவர்கள் தி.மு.க.வுடன் சேரலாமா அல்லது அ.தி.மு.க.வில் சேரலாமா என்ற சிந்தனையில் உள்ளனர்.

எங்கள் கட்சி இதுவரை சட்டசபையில் இடம் பெறவில்லை. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம்.மதவாத கூட்டணியை ஓய மாட்டேன் எனஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் அந்த உத்தரவாதத்ததை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். எங்களுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நாங்கள் அ.தி.மு.க.வைஆதரிப்போம் தி.மு.க., பா.ஜ. கூட்டணியை தோற்கடிக்க தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+