தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர்?
சென்னை:
தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று, சோனியா காந்தியைச் சந்தித்துதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர இருப்பதால் தமிழககாங்கிரசில் கோஷ்டி பூசல் தொடருவதை சோனியா விரும்பவில்லை என்று தெரிகிறது.
எனவே தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவரை நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டுநாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம், தண்டாயுதபாணி, அன்பரசு மற்றும் கோவை செல்வராஜ் ஆகியோரில்யாராவது நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.