வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்றங்கள் ஸ்தம்பிப்பு
சென்னை:
வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து திங்கள்கிழமை வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்ததால் தலைநகர்சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
முதலாவது தேசிய நீதித்துறை ஊதியக் கமிஷன், தனது பரிந்துரையில் நீதிமன்றங்கள் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஏனெனில் நிலுவையில் இருக்கும்வழக்குகளை ஆறு நாட்கள் வேலை செய்தால் மட்டுமே விரைவில் முடிக்க முடியும். அதனால் நீதிமன்றங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 30 நாட்கள் கோடை விடுமுறையை 15 நாட்களாக குறைக்கப்பட்டதையும், வேலை நேரத்தை இன்னும்அதிகரித்ததை எதிர்த்தும் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாகக் குறைக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்துப் போராட்டம் நடத்தினர்.இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications