புஷ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்:
எலக்டோரல் ஓட்டுக்கள் எண்ணிக்கை சரிபார்த்து அமெரிக்க காங்கிரஸ் சபை அளித்த சான்றிதழ் மூலம் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7 ம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடந்தது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், தற்போது துணை அதிபருமானஅல்கோர் 266 எலக்டோரல் ஓட்டுக்களையும், குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் 271 ஓட்டுக்களையும் பெற்றனர்.
மிகக்குறைந்த எலக்டோரல் ஓட்டுக்களில் தோல்வியடைந்ததால், மீண்டும் மாகாண ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஃபுளோரிடா நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார் அல்கோர். அதை எதிர்த்து புஷ்ஷூம் வழக்குத் தொடர்ந்தார்.
அதற்குப்பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் புஷ்ஷின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் வழக்குத் தொடரக்கூடாது என்று அல்கோருக்கும்உத்தரவிட்டது.
இந்நிலையில், எலக்டோரல் ஓட்டுக்களை சரிபார்த்து காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் புஷ்ஷின் வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதுபுஷ்ஷின் வெற்றியை அமெரிக்க தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications