சந்திரிகாவை சந்திக்கிறார் நார்வே தூதுக்குழு தலைவர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், அதிபர்சந்திரிகாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்என இலங்கை அரசும், புலிகளும் அறிவித்து வருகின்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தை துவங்குமுன் சண்டைநிறுத்தம் செய்ய வேண்டும் என புலிகள் வற்புறுத்துகின்றனர்.தற்போது ஒரு மாதகால ஒரு தரப்பு சண்டை நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவித்துள்ளனர்.
ராணுவ வீரர்களின் கடும் தாக்குதல் காரணமாக புலிகளின் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.ஆள்பற்றாக்குறையை போக்குவதற்காக, ஏராளமான பள்ளிச் சிறுவர்களையும் புலிகள் தங்கள் படையில்ஈடுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் புதிய வழிமுறைகளுடன் இரு தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக, நார்வே குழுத்தலைவர் எரிக் சோல்ஹெம் இலங்கை வருகிறார். திங்கள்கிழமை அவர், அதிபர் சந்திரிகாவை சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கிடையே புலிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கும் முன் சண்டைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்று அதிபர்சந்திரிகா உறுதியாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.