வங்கியைக் கலக்கிய வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள வெளிநாட்டு வங்கி ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என கிளம்பியபுரளியையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் அருகில் இருக்கும் கிரின்ட்லேஸ் வங்கியில் வெடிகுண்டுவெடிக்கும் என வந்த தகவலை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது புரளிஎன தெரிந்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கிரின்ட்லேஸ் வங்கிக்கு அடையாளம் தெரியாதஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ளவெடிகுண்டு காலை 11 மணிக்கு வெடிக்கும் என கூறினார்.
தகவல் அறிந்த பின் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த இடத்திற்கு விரைந்துவந்து வங்கி முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும்கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications