பு.நீ.க.மாநாட்டில் வெடிகுண்டு மிரட்டல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேராணம்பட்டில் நடந்த புதிய நீதிக்கட்சி மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து மாநாடு நடந்து கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய நீதிக் கட்சியின் பேரணாம்பட்டு தொகுதி மாநாடு திரு.வி.க.நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் மற்றும்தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த நிலையில் மாநாட்டுக்கு ஒலி- ஒளி அமைத்து இருந்த பி.ஆர்.சி. அலுவலகத்துக்கு ஒரு மர்ம போன் வந்தது. போனில் பேசியவர் தனது பெயர் அக்தர்என்றும், மாநாட்டில் வெடிகுண்டு வைப்போம் என்றும் கூறினார்.
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து சோதனை நடத்திய போது வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரியவந்தது. இருப்பினும் மாநாடு நடந்து கொண்டிருந்த இடம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications