For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீக்குளிப்போம்..தி.தெ.மு.க. மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை 152 அடியாக உயர்த்த அனுமதிக்காவிட்டால், கேரள முதல்வர் வீட்டு முன்பாக தீக்குளிப்போம் என்று திராவிடதெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்தியக் குழு உறுதி செய்த பிறகும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு முரண்டுபிடிக்கிறது. பொய்யான காரணங்களைக் காட்டி முட்டுக்கட்டை போடுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கேரள அரசுக்கு எதிராக தமிழகத்தில் வசிக்கும் மலையாள மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.கேரளாவில் முதல்வர் ஈ.கே.நாயனார் வீட்டு முன்பாக எங்கள் கட்சியினர் தீக்குளித்து உயிரை விடுவர். முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிகூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும்.

அடுத்த மாதம் 10 ம் தேதி சென்னையில் எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் உள்பட பல்வேறுகட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X