நெடுமாறனை கைது செய்ய கோரிக்கை
திருச்சி:
நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் பிடியிலிருந்து மீட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் திருச்சியில் சமீபத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வீரப்பன் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்றார்.அவருக்கு வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து நன்கு தெரியும். அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும்.
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது என்று சிலர் பேசி வருகிறார்கள். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்று மும்பைஹைகோர்ட் சமீபத்தில் கூறியது. ஜெயலலிதா தேர்தலில் நின்று கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
அ.தி.மு.க.வுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே புதிய கூட்டணி என்றும் சிலர் புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும்இல்லை. ஜெயலலிதா ஏற்கனவே இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
திருச்சியில் பாய்லர் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றார் ஜெகவீரபாண்டியன்.