ராஜீவ் கொலைக்குற்றவாளி நளினிக்கு கம்ப்யூட்டர் ஆசை
வேலூர்:
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதி நளினி கம்ப்யூட்டர் கல்வி கற்க விருப்பம்தெரிவித்துள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் தேசிய பெண்கள் கமிஷன் தென்னிந்திய பொறுப்பாளர் சாந்தா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. விசாரணை கைதிகளுக்கு வழக்குகள் தொடர்பானபட்டியல் தயாரித்து சிறை வளாகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும்.
வேலூர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, இந்திராகாந்தி திறந்தவெளிபல்கலை மூலம் கம்ப்யூட்டர் கல்வி கற்க விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். அவரது கல்விக்கு ஏற்பாடு செய்யப்படும். பெண்குற்றவாளிகளுக்கு தண்டனை முறையை மாற்ற வேண்டும்.
பெண்கள் நலுனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் திருப்திகரமாக உள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.