வள்ளுவர் சிலைக்கு வாழ்வு கிடைக்குமா?
பெங்களூர்:
பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை எவ்வளவு விரைவில் திறக்க முடியுமோ அவ்வளவு விரைவில் திறக்க கர்நாடக அரசு முயற்சிசெய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூரில் நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது பற்றி இரு மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்க இரு மாநிலஅரசுகளும் சம்மதித்தால், வீரப்பன் சரணடைவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். வீரப்பன் மனித நேயம் மிக்கவர்.
இப்போது வீரப்பன் காட்டில்தான் இருக்கிறாரா என்பது குறித்து அதிரடிப்படை தலைவரிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அவர்தான் இப்போதுகாட்டில் இருக்கிறார்.
வீரப்பன் வைத்த கோரிக்கைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இல்லை. வீரப்பனுடன் இருக்கும் மாறன் இந்தியக் குடிமகன். இந்தியாவில்உள்ள தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் முடிச்சுப் போடுவது சரியல்ல.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க கர்நாடக அரசு வெகு விரைவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழர் தேசிய இயக்கம் அரசியல் கட்சி. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காக போராடுவதற்கு ஆரம்பிக்கப்பட்டஇயக்கம் இது. எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications