இன்டர்நெட் மயமாகிறது பாரதியார் பல்கலை.
கோவை:
பாரதியார் பல்கலைக் கழகம் முழு இன்டர்நெட்மயாமாகிறது. இதனால் அனைத்து கல்லூரிகளும்ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும். விரைவில் "ஆன்லைன் லைப்ரரி ஒன்றை பல்கலைக் கழகம் நிறுவ உள்ளதுஎன பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னாசி முத்து தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னாசி முத்து நிருபர்களுக்கு அளித்த போட்டியில்கூறியதாவது:
பாரதியார் பல்கலைக் கழகத்தில் புதிதாக 6 பட்டப்படிப்புகள் துவங்கப்படவுள்ளன. இந்தப் பட்டப்படிப்புகள்அனைத்திலும் புதிதாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எம். எஸ்.சி தகவலியல், எம்.எஸ்.சிதொழில்சார்ந்த உயிரிய தொழில்நுட்பம், எம்.எஸ்சி மொபைல் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி மருத்துவ இயற்பியல்,எம்.எஸ்.சி நிதி மற்றும் கம்ப்யூட்டர் இயல், எம்.ஏ கல்வி தகவல் தொடர்பு ஆகும்.
இந்தக் கல்வி பெறும் இதே ஆண்டில் இன்னொரு பட்டப்படிப்பிற்கும் பல்கலைக் கழகம் அனுமதி வழங்குகிறது. 3ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள், மேலும் ஒரு ஆண்டு படித்தால், புதிய பட்டம் வழங்கப்படும்.
மேலும், இந்தக் கல்வி முறை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இன்ஜினியரிங், கலை அறிவியல்கல்லூரிகளுக்கும் பொருந்தும். பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும்கம்ப்யூட்டர்மயமாகிறது.
மேலும் பல்கலைக் கழக விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் விடுதி, செனட், ஆசிரியர் விடுதி,போன்றவை கட்டப்படவுள்ளது. இதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications