ராமேஸ்வரத்தை நோக்கி மீண்டும் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திற்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளது.
இலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும்சண்டையினால் ஏராளமான அகதிகள் அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த மாதம் 25 ம் தேதி கடைசியாக அகதிகள் வந்தனர். அதன் பிறகு கடந்த சனிக்கிழமை 21 அகதிகள் படகுமூலம் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களில் 10 பேர் ஆண்கள். 6 பேர் பெண்கள். மற்றவர்கள் குழந்தைகள்.
இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தலா ரூ 1500 படகு கட்டணம் செலுத்தி தனுஷ்கோடிஅரிச்சமுனை கடற்கரை பகுதியில் வந்து இறங்கினார்கள்.
அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் போலீஸாரும், பிற அதிகாரிகளும் தீவிர விசாரணைநடத்தி பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications