ஆட்சி மாற்றம் வரும்.. சந்திரசேகர்
சேலம்:
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என முன்னாள்பிரதமர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள ஏற்காட்டில் ன்னாள் பிரதமர் சந்திரசேகர் தங்கியுள்ளார். இவரை நண்பர் என்ற முறையில்சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் நண்பர் என்ற முறையில் ஏற்காட்டில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர் சந்திரசேகரை நான் சென்றுசந்தித்தேன். அவர் தமிழகத்தில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசு கடந்த நாலரை ஆண்டுகளாக என் மீது வழக்குப் பதிவு செய்ய தேவையான அத்தனைமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், எந்த வழக்கும் என் மீது அவர்கள் போட இயலவில்லை.எனவே, சசிகலா 985 கோடி ரூபாயை வெளிநாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாகப் பேசிவருகின்றனர். இதை வைத்து வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டிற்கே செல்லாத சசிகலா எப்படி வெளிநாட்டில் பணத்தைக் கொண்டு போய் போட முடியும் என்றார்நடராஜன்.