மேட்ச் ஃபிக்சிங்..வடேகரிடம் மாதவன் விசாரணை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி மாதவன், அஜீத் வடேகரை விசாரணை செய்தார்.
மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக சி.பி.ஐ. குற்றம் சுமத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால்நியமிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மாதவன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும்,முன்னாள் இந்திய கிரிக்கெட் அணயின்பயிற்சியாளருமான அஜீத் வடேகரை திங்கள்கிழமை காலை டெல்லியில் இருக்கும் பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் விசாரணை செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கபில்தேவையும், அஜீத் வடேகரையும் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக விசாரணை செய்யுமாறு கேடடுக்கொண்டது. அதன் படி முதலில் அஜீத் வடேகரிடம் விசாரணை நடந்தது.
இது குறித்து மாதவன் கூறுகையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டபடி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர்களை விசாரித்துஇந்த மாதத்திற்குள் கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை சமர்பிக்க இருக்கிறேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications