தி.மு.க.ஆட்சியில் 80 புதிய நீதிமன்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகளில் 80 கோர்ட்டுக்கள் திறக்கப்பட்டுள்ளன என்று சட்ட அமைச்சர் ஆலடி அருணா தெரிவித்தார்.

சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஆலடி அருணா பேசியதாவது:

தமிழகத்தில் 104 கோர்ட்டுக்கள் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. 4 ஆண்டில் மட்டும் இதுவரை 80 புதிய கோர்ட்டுக்களை திறந்துவிட்டோம்.

சட்டத்தை யார் மீறினாலும் அதை தட்டி கேட்கும் அளவிற்கு நமது நீதித்துறை அமைந்துள்ளது. இப்போது ஜனநாயகம் மக்களால் மட்டுமல்லாமல்நீதித்துறையாலும் காக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு இலவச சட்ட உதவி ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் 14லட்சம் வழக்குகள் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகள் முதல் ஐகோர்ட் வரை தேக்கம் அடைந்துள்ளன. இந்த தேக்கத்தை போக்க இதுபோன்ற சட்டகருத்தரங்குகள் மூலம் ஆலோசனைகள் கூற வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி நடந்து வரும் இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 80 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் ஆலடி அருணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+