போலி அடையாள அட்டை.. தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை:

போலி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற முயற்சித்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என கோவையில் தமிழகத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சாய் சாரங்கி தெரிவித்தார்.

வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைப் பார்வையிட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சாய் சாரங்கி கோவை வந்திருந்தார். அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்திலேயே கோவையில் அடையாள அட்டை வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. கோவையில் மட்டும் இதுவரை 4 லட்சம் பேருக்குஅடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 65 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர் வீடு வீடாகச் சென்று 100 சதவீத அடையாள அட்டை வழங்க தகுந்த நடவடிக்கைஎடுக்கப்படும். பின்னர் 10.9 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர் அடையாள அட்டை பெறப்படாமல் இருந்தால், சரிபார்க்கும் பணிமேற்கொள்ளப்படும்.

அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும். 55 ஆயிரம் வாக்குச் சாவடிகளில்பயன்படுத்த 61 ஆயிரம் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் தயாரிக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் ஓட்டுப் போட முடியாது.அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த வாக்காளர் அடையாள அட்டை தேர்தலில் ஓட்டுப் போட மட்டுமல்ல, அனைத்து பணிகளுக்கும்பயனுள்ளதாக அமையும்.

போலி வாக்காளர் அட்டை பெற முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைகிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார் சாரங்கி. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம், மாநகராட்சி கமிஷனர் ஹிதேஷ்குமார்மக்வானா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+