எண்ணெய் உற்பத்தி: இந்தியா-வியட்நாம் ஒப்பந்தம்
ஹனோய்:
எண்ணெய் உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் வர்த்தகத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என இந்தியாவும், வியட்நாமும் ஒப்பந்தம்செய்து கொண்டன.
இதற்கான மூன்று ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்த மூன்று ஒப்பந்தங்களும் வியட்நாம் சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய்தலைமையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்கள் படி, விதேஷ் எண்ணெய் உற்பத்தி மற்றும் இயற்கை வாயு கழகம் வியட்நாமில் 234 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்தஒப்பந்தத்தில் விசேஷ் நிறுவனமும், வியட்நாம் பெட்ரோலிய வளர்ச்சிக் கழகமும் கையெழுத்திட்டன. இதையடுத்து ஆட்டோமொபைல் மற்றும்வர்த்தகத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
முன்னதாகக் கடந்த வருடம் வியட்நாமில் உள்ள ரான்பாக்சி பாரமசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தார் மிகப்பெரிய மருந்துப் பொருட்கள் விற்பனைக் கூடம்ஒன்றைத் தொடங்கியிருந்தனர்.
அந்த விற்பனைக் கூடத்தின் மருந்துப் பொருட்கள் தயாரிப்புப் பிரிவை பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். மருந்துப் பொருட்கள்விற்பனைக் கூடத்திற்காக ரூ 4 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.