ரேஷன் ஊழியர்களுக்கு பென்ஷன் கோருகிறது அதிமுக
சென்னை:
சிவில் சப்ளை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரிஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம், ஹவுசிங் போர்டு, சென்னை மெட்ரோ வாட்டர்மற்றும் பாடபுத்தக நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்படுகிறது.ஆனால் சிவில் சப்ளை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதை எதிர்த்து ஜனவரி 18 ம் தேதி சிவில் சப்ளை கழக ஊழியர்களுக்கு ஆதரவாகஅ.தி.மு.க.போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துமாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் சிவில் சப்ளை அலுவலகத்தின் முன்ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தப்படும்.
ஜனவரி 30 ம் தேதி சிவில் சப்ளை ஊழியர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தங்களதுகோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அரசுக்கு வேண்டுகோள்விடுப்பார்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications