பெண் நிர்வாண போஸ்..கும்பமேளாவில் அதிர்ச்சி
கும்பாநகர் ( அலகாபாத்):
அலகாபாத்தில் நடந்து வரும் கும்ப மேளா விழாவில் கலந்து கொள்ள வந்த மெக்ஸிகோவை சேர்ந்த பெண் செவ்வாய்க்கிழமை கங்கை ஆற்றில்குளிக்கும் போது நிர்வாணமாக நின்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அலகாபாத்தில் திங்கள்கிழமை தொடங்கியுள்ள கும்ப மேளா விழா தொடர்ந்து ஆறு வாரங்கள் நடக்கும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகஉலகம் முழுவதிலுமிருந்து 70 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்த ஆற்றில் மெக்ஸிகோவைச்சேர்ந்த கிறிஸ்டினா (25) என்ற பெண் நிர்வாணமாக நின்று போட்டோ எடுக்க போஸ் கொடுத்தார். அவரது ஆண் நண்பர்கள் நான்கு பேர் அவரைபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இது அந்த ஆற்றில் குளிக்க வந்த 1000 க்கும் மேற்பட்ட பக்தர்களை தர்மசங்கத்திற்குள்ளாக்கியது. கும்பாநகர் உயர் போலீஸ் அதிகாரி அலோக்ஷர்மா சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் பெண் போலீஸார் அந்தப் பெண்ணை தாங்கள் கொண்டு வந்திருந்த உடைகளால் அவரை மூடி போலீஸ்வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பின்னர் அப்பெண் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்பெண்ணின் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில் கும்பமேளா நடக்கும் இடத்துக்கு அருகே பக்தர்கள் குளிக்கும் ஆற்றில் இந்தப் பெண் கிறிஸ்டினா சரியாக 8மணியளவில் தனது நான்கு ஆண் நண்பர்களுடன் வந்தார். அவர் உடனடியாக தான் அணிந்திருந்த உடைகள் அனைத்தையும் களைந்து விட்டு போட்டோ எடுக்கபோஸ் கொடுத்தார். அதற்கு முன் தன் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டார். இது போன்ற சம்பவங்கள் கும்ப மேளா போன்ற நல்ல நிகழ்ச்சிகளில்எதிர்பார்க்க முடியாத சம்பவமாகும் என்றார்.
இச்சம்பவம் மேளாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஏராளமான பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.