எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்..7 நாட்கள் விழா
சென்னை:
எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் கொண்டாட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்.ஜி.ஆரின் 84 வது பிறந்தநாள் விழா வரும் 17 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும்.
இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர்.உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புக்கள் வழங்கியும், ஏழைகளுக்கு உதவிகள் செய்தும் அவரின்பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமென தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஒரு வார கால பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தவும்அ.தி.மு.க.முடிவு செய்துள்ளது. இந்தப் பொதுக் கூட்டங்களை எம்.ஜி.ஆர்.மன்றம், ஜெயலலிதா பேரவை மற்றும் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள்கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications