மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ. கட்சியால் ஜனநாயகத்துக்கே இழுக்கு..பாஜக
பாண்டிச்சேரி:
கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் வன்முறையைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளிவிழுந்து விட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நரேந்திர மோதி குற்றம்சாட்டியுள்ளார்.
பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள கார்பேட்டா பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மேல் கம்யூனிஸ்ட்தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். திரிணாமூல் காங்கிரஸார் பந்த் நடத்தியபோது 18 திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
அரசியல் லாபத்துக்காக அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயமாகும்.
ஜம்மு காஷ்மீரில் முழுவதுமாக தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்பது மட்டும் மத்திய அரசின் குறிக்கோள் அல்ல. அங்கு அமைதியைஏற்படுத்துவதும் மத்திய அரசின் குறிக்கோளாகும்.
பாண்டிச்சேரியில் வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும்ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு கேட்கும் என்றார் நரேந்திர மோதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications