For Daily Alerts
Just In
பொங்கல் ஸ்பெஷல்.. தியேட்டரில் 5 காட்சிகள்
சென்னை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் காட்டலாம் என தமிழக அரசுஅனுமதியளித்துள்ளது.
வரவிருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நிரந்தர மற்றும் பகுதி நேரதியேட்டர்களில் 5 காட்சிகள் காட்ட அனுமதி தர வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தமிழகஅரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
தமிழக இந்த கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் படி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரைதிரையரங்குகளில் 5 காட்சிகள் காட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் திரையரங்குகள் 14,15,16-ம் தேதிகளில் காலைக் காட்சிகளாகவும், 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரைபகல் காட்சிகளாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர், கேளிக்கை வரி அதிகாரி ஆகியோரிடம் தகவல் தெரிவித்துகாட்டும் படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Story first published: Tuesday, January 9, 2001, 5:30 [IST]