For Quick Alerts
For Daily Alerts
Just In
திருமண வீட்டில் எஸ்.பி. மரணம்
சென்னை:
சென்னையில் நடந்த தனது தம்பி மகன் திருமணத்திற்கு வந்திருந்த கோவை சிறைத்துறை எஸ்.பி.திருமண வீட்டிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோவை சிறைத்துறை எஸ்.பி.யாக இருந்தவர் பரமசிவம்.(56). இவரது தம்பி சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க.நகரில் வசித்து வருகிறார். தம்பிமகனின் திருமணம் சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பரமசிவம் சென்னை வந்திருந்தார்.
வந்த இடத்தில் உறவினர்களுடன் நன்கு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள்அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
Comments
Story first published: Tuesday, January 9, 2001, 5:30 [IST]