ராமதாசுடன் சந்திப்பு..விளக்கம் கூற முதல்வர் மறுப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸூடன் நடந்த சந்திப்பு குறித்து முதல் கருணாநிதி விளக்கம் கூற மறுத்து விட்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை ராமதாஸூம், கருணாநிதியும் திடீரென சந்தித்துப் பேசினர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள்என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையே புதன்கிழமை முதல்வர் கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், திமுக வில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தால்பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து விலகும் என்று ராமதாஸ் கூறி வருகிறாரே என்றனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி இது குறித்து நான்எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 2 வது மிகப்பெரிய கட்சியாக அதாவது அதிக தொகுதிகளில்போட்டியிடும் என்று கூறியதாக பத்திரிக்கைகளில் படித்தேன். அது மிகவும் வருத்தமான விஷயம்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனியான தேர்தல் திட்டத்தை வகுக்கும் என்று கூறி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும்என்று ஒவ்வொரு தேர்தல் திட்டம் இருக்கும். இதில் யாரும் குறுக்கிட முடியாது.
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். அதுகுறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.
கடந்த மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த தி.மு.க தொண்டர்களுடன் தேர்தல் நிலவரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதே போல் புதன்கிழமைகோவை மாவட்ட தி.மு.க தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதே போல் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க தொண்டர்களுடன்தேர்தல் நிலவரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.
புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications