இந்தியா - இந்தோனேசியா 5 ஒப்பந்தங்களில் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
நாட்டின் பாதுகாப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் இந்தியாவும், இந்தோனேசியாவும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்தோனேசிய அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இந்தோனேசியாவுக்கு கடற்படை உதவிகள் அனைத்தையும் இந்தியா அளிக்கும். அதாவது பழுதாகிப்போன கப்பல்கள்,படகுகள் மற்றும் விசைப்படகுகளை சரிபார்க்க இந்தியா உதவி புரியும். பாதுகாப்பு ஒப்பந்தப்படி தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் இரண்டுநாடுகளும் இணைந்து செயல்படும்.
பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் பாஞ்சா இந்தோனேசியா பாதுகாப்பு அமைச்சர்மொகபத் ஆகியோர் இருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications