சந்திரிகாவின் புதிய திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
கொழும்பு:
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சமீபத்தில்பாரிசில் அதிபர் சந்திரிகா கூறியதற்கு எதிர்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் தயா பெல்போலா கூறியதாவது:
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிபர் சந்திரிகா கூறியதுதவறாகும். இதற்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.
ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்துக்கே பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும். பாரிசில் அவர் புதிய அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்றியேதீருவேன் என்று கூறியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும் என்றார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய எம்.பி. சமரசிங்கே கூறுகையில் பாரிசில் அதிபர் சந்திரிகா கூறியது சர்வதேச குற்றமாகும். இது குறித்துநாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications