For Daily Alerts
Just In
ஐ.நா. வில் நிரந்தர இடம் .. இந்தியாவுக்கு இந்தோனேசியா ஆதரவு
ஜகார்த்தா:
ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க இந்தோனேசியா முழு ஆதரவு அளிக்கும் என்றுஇந்தோனேசிய அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் வியட்நாம் மற்றும் இந்தோனேசியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில்வியட்நாம் சென்று விட்டு புதன்கிழமை இரவு இந்தோனேசியா சென்றார்.
பிரதமர் வாஜ்பாய்க்கு இந்தோனேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர்வாஜ்பாயுடன் பேசிய இந்தோனேசிய அதிபர் வாஹித் கூறுகையில், ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்கிடைக்க இந்தோனேசியா முழு ஆதரவு நல்கும்.
காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்தப்பிரச்சனையை இரு நாடுகளும் அமைதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]