மிசா. பாண்டியன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை (பெயில்) சென்னைஉயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பாண்டியனின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி என்.தினகர் அளித்த உத்தரவில், விசாரணை தற்போது முதல்கட்ட நிலையிலேயே இருக்கிறது. பாண்டியனும் சரண் அடையாமல் தலைமறைவாக இருக்கிறார். எனவே அவர்முன்ஜாமீன் கோரும் தகுதியை இழக்கிறார் என்றார்.
பாண்டியன் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதுகுறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சேர்ந்த ஜெயகாளியம்மன் நிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்18-ம் தேதி கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக வரிச்சியூர் செல்வம் என்பவர் போலீஸில்சரணடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் மிசா. பாண்டியன் சொல்லித்தான் கொலை செய்ததாககுறிப்பிட்டார்.
இதையடுத்து மிசா. பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
யு.என்.ஐ.