கூரையைப் பிய்க்கும் காங். கோஷ்டி பூசல்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிக்கக் கூடாது என்று தங்கபாலு தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அவர்கள் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் ராமமூர்த்தியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அவருக்குப் பதிலாகஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.
இளங்கோவன் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்திஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியை சந்தித்து தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இளங்கோவன்தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைவராக நியமிக்கப்பட்ட அவர் காங்கிரஸ் கமிட்டியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று அறிவித்தார். ஆனால் மீண்டும் இளங்கோவனைநியமினம் செய்ததற்கு தங்கபாலு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்திக்குத் தந்தி அனுப்பினார்கள்.
இந்நிலையில் தங்கபாலு ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சென்னை நியு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கூடுகிறார்கள். இவர்கள் முக்கிய முடிவுகள்எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications