For Daily Alerts
Just In
போகி: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
சென்னை:
போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். அப்போது வீட்டிலுள்ள பழைய பொருட்களையெல்லாம் தீயிட்டுக்கொளுத்துவார்கள். அப்போது தீங்கு விளைவிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவார்கள்.
அத்தகைய மக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்என்றார்.
Comments
Story first published: Friday, January 12, 2001, 5:30 [IST]