கஞ்சா பெண்ணிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
தர்மபுரி:
கஞ்சா தொழில் செய்து வந்த பெண்ணை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பெரியதண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகபூப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்குமுன்பு கஞ்சா விற்று பிழைப்பு நடத்தி வந்தார். பின்னர் இந்த தொழிலை விட்டு வேறு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர். இந்த வாலிபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகபூப்பிடம் போலீசார் சோதனைநடத்தினர். அப்போது மகபூப்பை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், ரூ. 50 ஆயிரம் பணம் வேண்டும்என இன்ஸ்பெக்டர் முனியப்பன் கேட்டுள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மகபூப் புகார் செய்தார். பின்னர் லஞ்சமாக ரூ. 50 ஆயிரம் கொடுக்கஏற்பாடு செய்யப்பட்டது. மகபூப்பின் உறவினர் ரஷீத் இந்தப் பணத்தை இன்ஸ்பெக்டர் முனியப்பனிடம்கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் பணத்தைப் பொறும் போது கையும் களவுமாகப் பிடித்துஇன்ஸ்பெக்டர் முனியப்பனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications