அழுத குழந்தையை வெந்நீரில் அழுத்திக் கொன்ற தாய்
கோலா லம்பூர்:
தொடர்ந்து அழுது கொண்டேயிருந்த பிறந்து 14 மாதமே ஆன இளம் குழந்தையை வெந்நீரில் அழுத்திக் கொன்றார் அக்குழந்தையின் தாய்.
கோலாம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வரும் பெண்ணுக்கு 14 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தது.
கணவரைப் பிரிந்து தனியே வசித்து வரும் இந்தப் பெண்ணால் குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியவில்லை. மேலும் இவர் தனது புதிய காதலனுடன்வெளியில் செல்வதற்குத் தடையாக இருக்கும் இக்குழந்தையை கொன்று விடுவது என்று திட்டம் தீட்டினார்.
உடனடியாக அக்குழந்தையை வெந்நீருக்குள் போட்டார். பச்சிளங்குழந்தை சூடு பொறுக்க முடியாமல் கதறி அழுது இறந்தது. பின்னர் பிரேசபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழந்தையின் பெயர் நிஷாலினி. வெந்நீரில் கிடந்ததால் அக்குழந்தையின் உடல் உறுப்புக்கள் அனைத்தும்வெந்து கிடந்தன.
தன் சொந்தக் குழந்தையைக் கொலை செய்தது தொடர்பாக அப்பெண் உடனடியாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications