For Daily Alerts
Just In
பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள், மாடு சாவு
தர்மபுரி:
தர்மபுரி அருகே பஞ்சராகி நின்றிருந்த பஸ் கவிழ்ந்து இரண்டு மாணவிகள் இறந்தனர்.
ஒசூர் அருகே உள்ள தென்கனிக்கோட்டையில் பஸ் ஒன்று ஒசூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் பஞ்சராகி ஒரு இடத்தில் நின்றது.
பஸ்சில் இருந்த பள்ளி மாணவிகள் அனைவரும் கீழே இறங்கி நடந்து சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக பஞ்சரான பஸ் கவிழ்ந்தது. கவிழ்ந்த பஸ் மாணவிகள்மீது விழுந்தது. இதில் இரண்டு மாணவிகள் பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.இதில் இருவரும் இறந்து போனார்கள்.
பின்னர் 50 அடி தூரத்திற்கு உருண்ட இந்த பஸ்சில் ஒரு மாடும் நசுங்கி இறந்தது. இந்தசம்பவம் குறித்து தேன்கனிக் கோட்டைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, January 13, 2001, 5:30 [IST]