தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி மீது நடவடிக்கை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு மற்றும் திண்டிவனம் ராமமூர்த்திஆகியோர் வெளிப்படையாக சோனியா காந்தியை எதிர்த்துப் பேசி வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் அவர் பேசுகையில், கடந்த வாரம் தான் என்னை கட்சித் தலைவராக தலைவர் சோனியா காந்திநியமித்தார். ஆனால் இதை எதிர்த்து இரு தலைவர்களும் கடுமையாகப் பேசி வருகின்றனர். சோனியாகாந்தியையும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்கோரிக்கை விடுப்பேன். சோனியா காந்தி என்னை நியமித்தார் என்ற காரணத்திற்காக அவர்கள் எனக்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சோனியாவைத்தான் எதிர்க்கின்றனர். இதன் மூலம்தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டு விட்டது என்றார் இளங்கோவன்.

முன்னதாக, சென்னையில், தங்கபாலுவும் அவரது ஆதரவாளர்களும் வெள்ளிக்கிழமை கூடி ரகசிய ஆலோசனைநடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு லாயக்கில்லாதவர்இளங்கோவன். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இளங்கோவன் போன்றவர்கள் தலைவர்பதவியில் இருந்தால் கட்சியை அது பாதிக்கும்.

மாநிலம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்துவதற்காக நாங்கள் பிரசாரம் செய்யவுள்ளோம் என்றார் அவர்.தங்கபாலு கூட்டிய கூட்டத்தில் பல அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+