கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கும் .. மலேசியா நம்பிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் மூன்று நாடுகள் போட்டியில் இந்தியாகலந்து கொள்ளும் என மலேசியா கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மத்திய அரசு அனுமதிக்கமறுத்ததையடுத்து மலேசியாவில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா கலந்து கொள்ளும்முன்று நாடுகள் போட்டியை மலேசியாவில் நடந்த மலேசிய அரசு முடிவு செய்தது.
இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. மலேசிய அரசு இந்தியகிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் நேரமின்மை காரணமாக இந்ததொடரில் இந்தியா பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதையடுத்து மீண்டும் இந்தியாவை மலேசியாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள வருமாறு அழைக்க மலேசியா முடிவு செய்துள்ளது. இது குறித்து மலேசியகிரிக்கெட் சங்கத் தலைவர் இம்ரான் துவாங்கு ஜாஃபர் கூறுகையில், சென்ற மாதம்இந்தியா சென்ற போது இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்தோம்.
ஆனால் இந்திய வாரியம் மறுத்து விட்டது. இந்த முடிவை மாற்றுவதற்கு முடிந்தஅளவுக்கு முயற்சித்துவருகிறோம்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமிடையே நல்ல நட்புறவு நிலவி வருகிறது.இதனால்இந்தியா நிச்சயம் மலேசியாவில் நடக்கவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் எனநம்புகிறோம்.
இந்தியாவும் , பாகிஸ்தானும் இங்கு வந்து விளையாடினால் அது மலேசிய அணிக்குநல்ல ஊக்கமாக அமையும் என்றார்.
இந்த போட்டிகளை இந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9-ம் தேதிவரைநடத்த திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications