சத்துணவு முட்டை சாப்பிட்ட குழந்தைகள் பாதிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் சத்துணவில் அளிக்கப்பட்ட முட்டையைசாப்பிட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவில் கொடுக்கப்படும் முட்டையை சாப்பிடும்குழந்தைகள் வாந்தி எடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்ற மாதம் பென்னாகரம், அரூர், காரிமங்கலம் பகுதிகளில் சத்துணவில்கொடுக்கப்பட்ட முட்டையை சாப்பிட்ட பல குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் இருக்கும்ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட 160 சிறுமிகளும், 130 சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள்அனைவரும் தொடர்ந்து வாந்தி எடுத்த வண்ணமிருந்தனர். இவர்கள் அனைவருக்கும்நாகரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியின் அமைப்பாளர், தலைமை ஆசரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளும்பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டிணத்திலிருந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்றுள்ளனர்.