ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து
டெல்லி:
பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிமக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்:
இந்த திருநாள் மக்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், உயர்வுகளையும் வழங்கட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்:
இந்த பண்டிகை உத்தராயணம் என அழைக்கப்படும் புண்ணிய காலத்தின்தொடக்கமாகும். இது இயற்கையை நம்பியிருக்கும் இந்தியர்களின் அறுவடையையும்குறிக்கும் நாளாகும்.
இந்த பண்டிகையின் போது நடத்ப்படும் பூஜைகள் நம் நாட்டின் பாரம்பரியத்தைவிளக்குவதாகும் என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய்:
பொங்கலும், மகர சங்கராந்தியும் மக்களுக்கு எல்லா உயர்வையும் அளிக்கட்டும்.மேலும் இந்த நன்னாள் மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும்கொண்டுவரட்டும்.
மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு அது வெற்றிகரமாக அமையட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications