ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிமக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்:

இந்த திருநாள் மக்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், உயர்வுகளையும் வழங்கட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்:

இந்த பண்டிகை உத்தராயணம் என அழைக்கப்படும் புண்ணிய காலத்தின்தொடக்கமாகும். இது இயற்கையை நம்பியிருக்கும் இந்தியர்களின் அறுவடையையும்குறிக்கும் நாளாகும்.

இந்த பண்டிகையின் போது நடத்ப்படும் பூஜைகள் நம் நாட்டின் பாரம்பரியத்தைவிளக்குவதாகும் என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

பிரதமர் வாஜ்பாய்:

பொங்கலும், மகர சங்கராந்தியும் மக்களுக்கு எல்லா உயர்வையும் அளிக்கட்டும்.மேலும் இந்த நன்னாள் மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும்கொண்டுவரட்டும்.

மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு அது வெற்றிகரமாக அமையட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+