ஓட்டுகளை பெற நடிக்கிறார் கருணாநிதி .. ஜெ.
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்கியதாக கூறி அழகாக நடிக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியைக் கடுமையாக அவர்சாடியுள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குஇட ஒதுக்கீட்டில் பல சலுகைகளை வழங்கியதாக கருணாநிதி வருகிறார். உண்மைக்கு மாறாக இவ்வாறு அவர் கூறிவருகிறார்.
இட ஒதுக்கீடு உயர்வு தமிழக அரசால் செய்யப்படவில்லை. மத்திய அரசு உத்தரவிட்ட பிறகே கருணாநிதி அரசுஅதை நிறைவேற்றியது.
தேர்தல் நெருங்கி வருவதால் தலித் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் பொய்யானதகவல்களை அளித்து வருகிறார்.
கடந்த தேர்தல் அறிக்கையின்போது, பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க திமுக அரசுநடவடிக்கை எடுக்கும் என்று திமுக உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த உறுதிமொழி போன இடம்தெரியவில்லை.
ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் சரியான பராமரிப்பில்லாமல்விடப்பட்டுள்ளது. இதனால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.