4 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை
சென்னை:
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்களைக் காணவில்லை என்று புகார்கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்மேகம், மாரி, பர்னபாஸ், ராமன் ஆகிய மீனவர்கள் 10-ம் தேதி மீன்பிடிப்பதற்காக,ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் படகில் சென்றனர். இதுவரை அவர்கள் திரும்பவில்லை.
இதுகுறித்து அறிந்த மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் காணாமல் போன மீனவர்களையும்அவர்களது படகுகளையும் தேடிக் கண்டுபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெனீபர் சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைஆகியவற்றிற்கு, காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவர்களும் தேடி வருகிறார்கள்.
மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றிருந்தால், அவர்களை மீட்டு தருமாறு, இலங்கையிலுள்ள இந்தியதூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications