1500 காவலர்களுக்கு வீரப் பதக்கம்
சென்னை:
தமிழகத்தில் 1500 காவலர்கள், தலைமைக் காவலர்கள் ஆகியோருக்கு முதல்வரின் வீரப் பதக்கம்வழங்கப்படுகிறது.
பொங்கல் திருநாளையொட்டி இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. மாநில உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர்இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காவலர்கள் தவிர, தீயணைப்புப் படை வீரர்கள், சிறைத்துறைக் காவலர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
முதல்வரின் தீயணைப்புப் பணி பதக்கம் 80 தீயணைப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல்வரின் சிறைத்துறைப் பதக்கம் 20 சிறைத்துறைக் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களில் கிரேட் 1,கிரேட்2 வார்டர்கள் அடங்குவர்.
பதக்கம் பெறும் காவலர்களுக்கு அவர்களுக்குரிய கிரேடின்படி மாதம்தோறும் ரூ. 40 முதல் 50 வரை படிவழங்கப்படும். பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார் அவர்.
யு.என்.ஐ.